Categories: சினிமா

அந்த ஒரு காரணத்துக்காகதான் நான் உதவியாளர்களே வைத்துக் கொள்ள கூடாது என முடிவு செய்தேன் – பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த இசைஞானி!

Spread the love

தமிழ் சினிமாவிற்கு இளையராஜா என்ற ஜாம்பவானைக் கொடுத்தது ‘அன்னக்கிளி’ திரைப்படம். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புயலாக வந்தார் இளையராஜா. அதன் பின்னர் ஐம்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவர் மையப் பேசுபொருளாக இருந்து வருகிறார்.

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னால் பல இசையமைப்பாளர்களிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அப்படி பணியாற்றியவர்களில் ஒருவர்தான் ஜி கே வெங்கடேஷ். அவர் சொன்ன ஒரு வார்த்தையால் காயம்பட்ட சம்பவத்தை இளையராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஏன் உதவி இசையமைப்பாளர்கள் வைத்துக் கொள்வதில்லை என்பது பற்றி இளையராஜா பேசியுள்ளார். அதில் ”நான் அன்னக்கிளி இசையமைக்கும் போது என் பாடல்கள் பற்றி என் நண்பன் செல்வராஜ் ஜி கே வெங்கடேஷ் அண்ணாவிடம் சென்று பாராட்டிப் பேசியுள்ளார். அதற்கு அவர் ‘ பாட்டு எல்லாம் எல்லோரும் போடலாம். ஆனால் ராஜாவுக்கு ரி ரெக்கார்டிங் வாசிக்கத் தெரியாது’ என சொல்லியுள்ளார்.

அவர் இப்படி சொன்னதைக் கேள்விப்பட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நான் அவரிடம் வேலை பார்க்கும் போது பல படங்களுக்கு அவர் பிஸியாக இருக்கும் போது பின்னணி இசை அமைத்துள்ளேன். அன்றைய தினம்தான் முடிவு செய்தேன். என்றுமே நான் எனக்கு உதவியாளர்கள் வைத்துக் கொள்ள மாட்டேன். என் இசை நல்லதோ, கெட்டதோ அது எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கப்படட்டும், ஆனால் அது என்னுடையதாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

“தமிழிசை, சீமானை வீழ்த்தியவர்களுக்கெல்லாம் பதவி… ஆனா எனக்கு?”…. VS பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு உண்மை….!

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தீவிர மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும்…

1 minute ago

விக்கிரவாண்டி வரிசையில் திண்டுக்கல்… 2 அரசு பேருந்துகள் பயங்கர மோதல்… ரத்த வெள்ளத்தில் பயணிகள்…!

விக்கிரவாண்டியைத் தொடர்ந்து திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

4 minutes ago

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

58 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… எப்படி இவ்வளவு கொடூரமாக இருக்க முடியும்?… நேபாளத்தில் ஆற்றில் வீசப்பட்ட நாய்… இணையத்தை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ… கொந்தளிப்பில் நெட்டிசென்கள்…!!

நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago