இன்றைய காலகட்டத்தில் பலரும் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மன உறுதியே மாற்றத்தை உருவாக்கும் சக்தி என்று நிரூபிக்கும் நிகழ்வுகள் சில நடைபெறுகிறது. அப்படியான நிகழ்வுகள் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. துருக்கியை சேர்ந்த இப்ராஹிம் யூசல் 26 ஆண்டுகளாக தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் பிடித்து வந்துள்ளார். பிள்ளைகளின் பிறந்தநாள் மற்றும் திருமண ஆண்டு விழா போன்ற முக்கியமான நாட்களில் பலமுறை நிறுத்த முயற்சித்தும் சில நாட்களிலேயே மீண்டும் பழக்கத்திற்கு அவர் திரும்பி விடுவார். இந்த அடிமைத்தனத்திலிருந்து தப்பிப்பதற்கு அவர் உண்மையான மாற்றத்தை தேடி இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட ஹெல்மெட் போன்ற ஒரு கூண்டை தலையில் பூட்டி உள்ளார்.
அதன் சாவியை மனைவியிடம் ஒப்படைத்ததால் பசி அல்லது தாகம் ஏற்பட்டபோது மட்டுமே மனைவி அந்த கூண்டை திறந்து விடுவார். இந்த புதிய முயற்சியால் சிகரெட் பிடிக்க முடியாத நிலை உருவாக சில நாட்களில் அவர் புகை பிடிப்பதை முற்றிலும் விட்டுவிட்டார். 11 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. ஒருவருக்கு மன உறுதியும் புதிய சிந்தனையும் இருந்தால் எந்த கெட்ட பழக்கத்தையும் நிறுத்தி விடலாம் என்பதற்கு இவருடைய முயற்சி பெரிய உதாரணமாகும்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…