#image_title
பா ரஞ்சித் சென்னை ஆவடியில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் உள்ள அரசு நுண்கலை கல்லூரியில் பட்டம் பெற்றவர். கல்லூரி காலத்தில் இருந்தே திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த பா ரஞ்சித் பிலிம் சேம்பரில் சேர்ந்து உலக சினிமாவை பார்க்க தொடங்கினார். ஆண்டு தோறும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வார் பா ரஞ்சித்.
கல்லூரி படிப்பை முடித்த பின்பு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு இயக்குனர் சிவசண்முகத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பா ரஞ்சித். 2006 ஆம் ஆண்டு சிவசண்முகம் இயக்கிய தகப்பன்சாமி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தொடர்ந்து உதவி இயக்குனராகவே பணிபுரிந்து சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் பா ரஞ்சித்.
2011 ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். முதல் படமே நல்ல விமர்சனங்களை அவருக்கு பெற்று தந்தது. 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 2016 ஆம் ஆண்டு கபாலி 2018 ஆம் ஆண்டு காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் பா ரஞ்சித். 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவை வேறொரு கோணத்தில் பார்க்கச் செய்தார்.
இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனராக மட்டுமில்லாமல் நீலம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல படங்களை தயாரித்து உள்ளார் பா ரஞ்சித்.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, சேத்து மான், பொம்மை நாயகி, ஜே பேபி ஆகிய திரைப்படங்களை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பா ரஞ்சித் கடவுள் நம்பிக்கை பற்றி பேசி உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் எனக்கு சிறுவயதிலிருந்தே கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. கடவுள் எனக்காக எதுவுமே செய்ததில்லை. ஒருவேளை நான் நினைத்தது நடந்திருந்தால் கடவுள் நம்பிக்கை வந்திருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதனால் இதுவரை எனக்கு கடவுள் மீது நம்பிக்கை கிடையாது என்று பகிர்ந்துள்ளார் பா ரஞ்சித்.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…