Categories: சினிமா

ஒரே நேரத்தில் ஒரே இயக்குனரிடம் நடித்த சிவாஜி மற்றும் MGR… இயக்குனர் செயலால் நொந்த புரட்சி தலைவர்…

Spread the love

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களும் முன்னணி நடிகர்களும் இன்றைய நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருந்த நடிகர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தமிழ் சினிமாவிலேயே ஒரு புதிய புரட்சி ஏற்படுத்தியவர்கள் தான் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி கணேசன்.

குடும்பம், புராணம், பக்தி, சமுதாயம் போன்ற பலவித கதைக்களங்களில் நடித்து பிரபலமானவர் சிவாஜி கணேசன். ஆக்சன், காதல் திரைப்படங்களில் சமூக சீர்திருத்த படங்களில் நடித்து புகழடைந்தவர் எம்ஜிஆர். இவர்கள் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் தான். சமூக வலைத்தளங்கள், இணையம் போன்றவைகள் இல்லாத காலத்திலேயே அத்தனை ரசிகர்களை கொண்டிருந்தவர்கள் சிவாஜி மற்றும் எம்ஜிஆர்.

இயக்குனர் கே சங்கர் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைப்பட தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் என்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி மற்றும் எம்ஜிஆரை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியவர் கே சங்கர்.

அப்படி ஒருமுறை கே. சங்கர் சிவாஜியையும் எம்ஜிஆரையும் வைத்து 1962 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி மற்றும் 1963 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடித்த பணத்தோட்டம் ஆகிய படங்களை ஒரே நேரத்தில இயக்கிக் கொண்டிருந்தார்.

காலை முதல் மதியம் வரை சிவாஜியை வைத்து ஆலயமணி படப்பிடிப்பிலும் மதியம் முதல் இரவு வரை எம்ஜிஆரை வைத்து பணத்தோட்டம் பட படிப்பையும் நடத்தி வந்தார் இயக்குனர் கே சங்கர். அப்படி எடுக்கும் போது இவர் செய்த செயலால் நொந்துவிட்டார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

கே சங்கர் செய்தது என்னவென்றால் காலையில் வழக்கம்போல் சிவாஜி அவர்களை வைத்து ஆலயமணி சூட்டிங் முடித்த பிறகு மதியம் எம்ஜிஆர் வைத்து பணத்தோட்டம் சூட்டிங்குக்கு வந்துள்ளார். எப்போதுமே இரண்டு டேக்குகளுக்கு மேல் செல்லாத எம்.ஜி.ஆர் அன்றைய தினம் ஏழு எட்டு டேக்குகள் எடுத்து எம்ஜிஆரை நடிக்க வைத்து உள்ளார் கே. சங்கர். பொதுவாக எம்.ஜி.ஆரிடம் இரண்டு டேக்குகளுக்கு மேல் யாரும் கேட்கவே பயப்படுவார்கள். ஆனால் சங்கரோ அத்தனை டேக்கள் வாங்கி விட்டார். அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் எம்ஜிஆர் சங்கரை அழைத்துள்ளார்.

சங்கரை அழைத்த எம்.ஜி.ஆர் என்னப்பா காலைல சிவாஜி வச்சு படம் எடுத்துட்டு வந்தியா அப்படின்னு கேட்டிருக்கிறார். சங்கர் ஆமாம் என்று கூறியிருக்கிறார். பின்னர் பேசிய எம் ஜி ஆர் தம்பி சிவாஜி பிரமாதமா நடிப்பாரு அவர் நடிக்கிற பாணி வேறு நான் நடிக்கிற பாணி வேறு. அதனால என்னால எவ்வளவு நடிக்க முடியுமோ என்கிட்ட எவ்வளவு வருதோ அதை மட்டும் வாங்கிக்கோங்க அப்படின்னு பேசி அனுப்பி இருக்கார் எம்ஜிஆர்.

admin

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

8 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

9 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

9 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago