விக்ரம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணியே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்ரம் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். இத்திரைப்படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது.
அடுத்ததாக விண்ணுக்கும் மண்ணுக்கும், பிதாமகன், சாமி, தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், காதல் சடுகுடு போன்ற தொடர் ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் விக்ரம்.
பின்பு அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், ஐ, இருமுகன், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் போன்ற கமர்சியல் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவரானார் விக்ரம்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த வருடம் அவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விக்ரம் ஒரு படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால், ஐ படத்திற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதில் நிறைய கெட்டப்கள் வரும். முதலில் பாடி பில்டர், அடுத்ததாக மாடல் அடுத்ததாக நலிந்து மெலிந்த வயதான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்காக 90 கிலோவில் இருந்து 52 கிலோ வரை என்னுடைய எடையை குறைத்தேன். தினமும் 50 கலோரிகள் அளவுக்கு தான் சாப்பிட வேண்டும். ஆனால் எடையை குறைக்க 100 கலோரிகள் பர்ன் செய்ய ஒர்க்அவுட் செய்வேன். நான் செய்வதை பார்த்து டாக்டரே பயந்துட்டாரு. ஒரு கட்டத்துல நீங்க இந்த மாதிரி பண்ணுனீங்கன்னா உங்களோட ஆர்கன்ஸ் எல்லாம் போயிடும் அப்படின்னு எனக்கு சொன்னாங்க. அந்த அளவுக்கு அந்த படத்துக்காக நான் கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா அது ரொம்ப தவறான விஷயம் அப்படி நான் செஞ்சிருக்கவே கூடாது என்று கூறியிருக்கிறார் விக்ரம்.