#image_title
திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.
2019 ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்யா துரைசாமி. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் திவ்யா துரைசாமி. பின்னர் இந்த ஆண்டு விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் திவ்யா துரைசாமி.
அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் திவ்யா துரைசாமி. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அனைவரின் பாராட்டுகளையும் பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் திவ்யா துரைசாமி.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி ஒரு நாளில் எப்படி சாப்பிடுவார் என்பதை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தான் சாப்பிடுவேன். இந்த சினிமாக்குள் வருவதற்கு முன்னாடி நான் ஃபுட்டியா தான் இருந்தேன். சினிமா கேரியருக்கு வந்ததுக்கப்புறம் நான் சாப்பிடுறதே ரொம்ப கம்மி பண்ணிட்டேன். ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அந்த மாதிரி தான் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடவே மாட்டேன். பேக்டு ஃபுட்ஸ் சாப்பிட மாட்டேன் எல்லாம் பார்த்து பார்த்து தான் சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார் திவ்யா துரைசாமி.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…