ஒரு நாளைக்கு நான் இப்படித்தான் சாப்பிடுவேன்… வாழை பட நடிகை திவ்யா துரைசாமி பளீச்…

By admin on புரட்டாதி 19, 2024

Spread the love

திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். இவர் தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.

   

2019 ஆம் ஆண்டு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்யா துரைசாமி. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

   

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் திவ்யா துரைசாமி. பின்னர் இந்த ஆண்டு விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் திவ்யா துரைசாமி.

 

அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் திவ்யா துரைசாமி. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அனைவரின் பாராட்டுகளையும் பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் திவ்யா துரைசாமி.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி ஒரு நாளில் எப்படி சாப்பிடுவார் என்பதை பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தான் சாப்பிடுவேன். இந்த சினிமாக்குள் வருவதற்கு முன்னாடி நான் ஃபுட்டியா தான் இருந்தேன். சினிமா கேரியருக்கு வந்ததுக்கப்புறம் நான் சாப்பிடுறதே ரொம்ப கம்மி பண்ணிட்டேன். ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் அந்த மாதிரி தான் சாப்பிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடவே மாட்டேன். பேக்டு ஃபுட்ஸ் சாப்பிட மாட்டேன் எல்லாம் பார்த்து பார்த்து தான் சாப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார் திவ்யா துரைசாமி.