அதிமுகவில் அடுத்த விக்கெட்?…. “பதவியே வேண்டாம்”… இபிஎஸ்-ஐ அதிர வைத்த எஸ்பி வேலுமணியின் மூவ்…. கோவையில் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து கட்சியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளை வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மகளிரணி கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு மீண்டும் தகுந்த பதவிகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகள் மீது தனது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், தான் இன்னும் அதிமுகவின் சாதாரண உறுப்பினராகவே தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கட்சியை விட்டு விலகவில்லை என்றும் எஸ்பி வேலுமணி இந்த பேட்டியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.