“காரை ஆற்றில் பாய்ந்து தப்பிய கணவன்… தண்ணீரில் மூழ்கிய மனைவி…! பஞ்சாப்பில் அரங்கேறிய திட்டமிட்ட கொலை..!”

Spread the love

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஹேப்பி சிங் என்ற ராணுவ வீரர் தனது மனைவி ரமண்தீப் கவுரை திட்டமிட்டு காரோடு பக்ரா கால்வாயில் குதித்து கொலை செய்துள்ளார். ஹேப்பி சிங்கிற்கு நன்றாக நீந்தத் தெரியும் என்பதால், கார் தண்ணீரில் மூழ்கியவுடன் அவர் கதவைத் திறந்து நீந்தி தப்பித்துவிட்டார். ஆனால், அவரது மனைவி காரில் சிக்கி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இறந்த ரமண்தீப் கவுரின் அண்ணன் குர்ஜீத் சிங் அளித்த வாக்குமூலத்தின்படி, ஹேப்பி சிங்கும் ரமண்தீப்பும் நீண்ட நாட்களாக காதலித்து, 2024 ஆம் ஆண்டில் பெற்றோரின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஹேப்பி சிங்கின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்க மறுத்ததால், இவர்களுக்குள் தொடர்ந்து குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு இவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான சண்டையைத் தொடர்ந்து, ஹேப்பி சிங் மனைவியைக் கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்று, பசியானா பாலம் அருகே ஓடும் ஆழமான பக்ரா கால்வாயில் காரை அதிவேகமாகச் செலுத்தி இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார்.

மறுநாள் காலையில் கால்வாயில் கார் மிதப்பதைக் கண்ட உள்ளூர் இளைஞர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் முங்குவழிகாரர்கள் காரை மீட்டு, உள்ளே இருந்த ரமண்தீப் கவுரின் உடலைக் கைப்பற்றினர். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ராணுவ வீரர் ஹேப்பி சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Swetha

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… பேல் பூரி வியாபாரியை அடித்து நொறுக்கி… பொரியை ரோட்டில் கொட்டிய கொடூரம்… பீகார் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு…!!

பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…

51 seconds ago

“நான் ஆறுதலா இருப்பேன்…” நகை கடை அதிபரின் மகளுடன் நட்பு… மீண்டும் வந்த கணவர் கேட்ட ஒற்றை கேள்வி… போலீஸ் ஸ்டேஷனில் அழுது புலம்பிய பெண்…. பகீர் சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…

8 minutes ago

ஐயோ… இஸ்ரேல் தாக்கிய கட்டிடம்… திடீரென இடிந்து 5 குழந்தைகள் உட்பட… 20 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய பகீர் சோகம்…!!

காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…

9 minutes ago

“‘என் மகனை உண்மையா காதலிச்சா செத்து போடி…” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய கொடூர தாய்… வீட்டில் சிக்கிய CCTV ஆதாரம்…. பகீர் பின்னணி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…

15 minutes ago

ஐயோ கொடுமையே… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து… முன்னாள் ராணுவ வீரர், மகள் வெட்டிக்கொலை… சொத்துத் தகராறில் உறவினர்கள் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…

21 minutes ago

விநாயகர் சதுர்த்தி விழாவில் சோகம்…! சிலையை கரைக்க சென்ற 6 மாணவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஞ்செரு பகுதியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையை நீரில் கரைக்க செய்யச்…

21 minutes ago