“உன் டார்ச்சர் தாங்க முடியல.. செத்துடுறேன்”… சாவதற்கு முன் இளம்பெண் பேசிய உருக்கமான ஆடியோ…. கண்ணீரில் முடிந்த காதல் கதை…!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காதலித்து கரம் பிடித்த இளம்பெண், திருமணமான ஓராண்டிலேயே வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் டார்ச்சர் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனிதிவயல் கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி பட்டதாரியான லாவண்யா, காருகுடியைச் சேர்ந்த தினேஷ் ராஜா என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இருவருடையது வேறு வேறு சமுதாயம் என்பதால் லாவண்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் சமயத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி லாவண்யா தனது காதலன் தினேஷ் ராஜாவுடன் சென்று கோவையில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு கோவையில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்த நிலையில், தினேஷ் ராஜா தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான காருகுடிக்குச் சென்றபோது, லாவண்யாவின் பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தி நகைகளைச் சீதனமாக வழங்கி அனுப்பியுள்ளனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தனக்கு கடன் சுமை அதிகமாக இருப்பதாகக் கூறிய தினேஷ் ராஜா, தனது தந்தை வீட்டிலிருந்து கூடுதல் பணம் மற்றும் நகைகளை வாங்கி வருமாறு லாவண்யாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி லாவண்யா கோவையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லாவண்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமான ஓராண்டிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் லாவண்யாவின் குடும்பத்தினர், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், லாவண்யா உயிரிழப்பதற்கு முன்பு பேசிய உருக்கமான ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “உன்னுடைய ஒவ்வொரு கேள்வியும், டார்ச்சரும் தாங்க முடியவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நீ சொல், நான் உன்னை விட்டு விலகிப் போய்விடுகிறேன் அல்லது செத்துக்கூடப் போகிறேன்” என்று லாவண்யா கண்ணீருடன் பேசியுள்ளது கேட்போரைக் கலங்கச் செய்கிறது. இந்தக் குரல் பதிவு, தினேஷ் ராஜா கொடுத்த மன உளைச்சலுக்கு மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒரு அழகான காதல் வாழ்க்கை, வரதட்சணைப் பேயால் இப்படிப் பரிதாபமாக முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

2 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

2 மணத்தியாலங்கள் ago