நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! 8 மாதக் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் உதைத்த கணவன்… கருவிலேயே துடிதுடித்து இறந்த குழந்தை…! உத்தராகண்டில் பரபரப்பு…!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கணவனால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பாப்லு என்ற நபர், தனது மனைவி சீமாவுடன் ஏற்பட்ட தகராறில், அவரின் வயிற்றில் காலால் உதைத்தும், மரக்கட்டையால் அடித்தும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தாக்குதலின் வீரியத்தால், சீமாவின் வயிற்றில் வளர்ந்து வந்த 8 மாதக் கரு அங்கேயே உயிரிழந்தது.

இந்தக் கொடூரம் வெளிச்சத்திற்கு வர சீமாவின் தந்தை ஷேர் சிங் தான் காரணமாக இருந்துள்ளார். மகளைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றபோது, கணவர் பாப்லு அவரை உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தந்தை உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம், உயிரிழந்த குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது சீமா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், பாப்லு தனது மனைவியை முன்னதாகக் கட்டாயப்படுத்தி பாலினக் கண்டறிதல் சோதனைக்கு அழைத்துச் சென்றதாகவும், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரிந்ததால் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், சீமாவின் பெயரில் இருந்த ஒரு நிலத்தை அவர் கணவருக்குத் தெரியாமல் விற்று, அந்தப் பணத்தைத் தன் பெற்றோருக்குக் கொடுத்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறு தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது குற்றவாளியான கணவர் பாப்லுவை போலீசார் கைது செய்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

3 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

4 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

4 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

4 மணத்தியாலங்கள் ago