திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அப்பன் ராஜ் என்பவருடைய மனைவி ஜீவா. இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் மற்றும் இரண்டு வயதில் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஜீவா பிரேம் குமார் என்ற வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து உள்ளார். இதனை அறிந்த கணவர் அப்புராஜ் ஜீவாவை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஜீவா, பிரேம்குமார் உடனான தனது உறவை துண்டித்துள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த பிரேம் நேற்று நள்ளிரவு ஜீவா தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்றார்.
அப்போது பிரேம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஜீவாவின் கணவரை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் பிரேம்குமார் அப்புன் ராஜை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் கை உள்ளிட்ட ஐந்து இடங்களில் மோசமான வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரேம் குமாரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் கண்முன்னே கணவன் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் விசிக ஆதரவு அளித்தாலும், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரன் அளித்த…
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாட்டினரால் கொலை செய்யப்பட்டால், அதற்குப் பதிலடியாக உடனடியாக அணுஆயுதத் தாக்குதலைத் தொடங்குவதற்கான…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வழங்கிய ஆதரவு கடிதங்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, காங்கிரஸ் மற்றும்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எச்சரிக்கை விடுத்துள்ள யூடியூப்பர் மாரிதாஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய அரசியல் சூழல்…