“அங்க ஒருத்தன் இங்கே ஒருத்தன்” என்னோட ஆத்திரம் தீரல.. ஆசிரியை கொலை செய்தது ஏன்..? கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை பட்டவர்த்தி பகுதியில் வசித்து வந்தவர் விஷ்ருத்(30) இவருடைய மனைவி ஸ்ருதி (27) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தபோது விஷ்ருத்தை  காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள்.  ஸ்ருதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக விஷ்ருத் தன்னுடைய மனைவியை அடித்துவிட்டு பிறகு அவரே  மனைவியை குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் புகுந்து தன்னுடைய மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.

   

இதனை அடுத்து காவல்துறையினர் விஷ்ருத்தை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், “நான் சென்னையில் வேலை பார்த்தபோது ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்தேன். பிறகு நாங்கள் இருவரும் சென்னையில் வசித்த போது ஸ்ருதி ஒரு நபருடன் பேசி வந்தார் இதை அறிந்து அவரை கண்டித்தேன்.  ஆனால் அவருடன் பேசுவதை கைவிடாத நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அ என்னுடைய சொந்த ஊருக்கு வந்தேன்.

   

அதன் பிறகு வேறு ஒருவரோடு பேசி பழகி வந்துள்ளார். இதனையும் கண்டித்தேன். இதனால் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தான் அவரை தாக்கினேன். காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஆத்திரம் தீராத நான் நேற்று முன்தினம் காலை அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார்.