அரசியலில் அடுத்த பரபரப்பு… சற்றுமுன் கட்சியில் இருந்து விலகல்…. ராஜினாமா கடிதத்தில் குண்டைத் தூக்கிப் போட்ட ராஜ்யசபா MP…!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

ஒடிசா மாநில ராஜ்யசபா எம்.பி.யான தேபாசிஷ் சமந்த்ரே, பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கட்சியில் தனக்குத் தொடர்ந்து அவமரியாதை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகத் தனது சேவை இனி கட்சிக்குத் தேவையில்லை என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்குக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ள அவர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த ராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். BJD-யிலிருந்து விலகியுள்ள தேபாசிஷ் சமந்த்ரே, அடுத்தகட்டமாக பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.