இன்றைய காலகட்டத்தில் பலருக்கு பொதுவாக இருக்கும் நோய் Diabetic எனப்படும் சர்க்கரை நோய். இந்த சர்க்கரை நோயானது ஒரு வாழ்நாள் நோயாகும். சர்க்கரை வந்து விட்டாலே எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தான் நடந்து கொள்ள வேண்டும். சாப்பிடுவதில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். சர்க்கரை அளவை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க வேண்டும். அப்படி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்படையும். அதில் முக்கியமானது கண். சர்க்கரை நோயினால் கண் பாதிப்புகள் என்னென்ன ஏற்படுகிறது அதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் போது எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகப்படியாக ஆகிவிட்டால் அது உள்ளுறுப்புகளை தாக்கும் போது முதலில் அதனால் தாக்கப்படுவது கண்கள்தான். இந்த அதிகப்படியான சர்க்கரை அளவு செல்லும்போது கண்களில் இருக்கும் ரத்த நாளங்களை பாதிப்படைய செய்கிறது.
இந்த சக்கரை நோயினால் ரத்த நாளங்கள் பாதிப்படையும் போது பார்வையில் பிரச்சனை உண்டாகும். இதை கவனிக்காமல் விட்டால் ஹைப்பர் கிளீசிமியா எனப்படும் நீரழிவு ரெட்டினோபதியை உண்டாக்கி கண் பார்வை தெரியாமல் போவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் கண் பார்வை சம்பந்தமாக ஏதாவது அறிகுறிகள் தெரிந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கண்களில் சர்க்கரை நோயினால் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதற்கு முதல் அறிகுறியாக கண்பார்வை மங்கலாக தெரியும் அல்லது இரட்டை பார்வை கொண்டு இருந்தாலும் கண் பாதிப்படைந்துவிட்டது என்பதாகும். இது சர்க்கரை நோய் உறுதியாவதற்கு முன்னால் கூட நடைபெறலாம். அதனால் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்கவே கூடாது.
அதேபோல உடலில் அதிக சர்க்கரை அளவு இருந்தால் கண்களில் சிறிய ரத்த நாளங்களை சேதப்படுத்தி விழித்திரையை பாதிக்கும். சர்க்கரை நோயை உறுதி செய்யும்போதே கண்களில் பாதிப்பு தொடங்கி இருக்கலாம். அதனால் கண் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

கண் தெரியாமல் போவது கண்களில் புள்ளிகள் மிதப்பது போன்று தோன்றுவது உங்களுக்கு முன்னால் பார்க்கும் போது புள்ளி போன்று தெரிவது கண்களில் பார்க்கும் போது ஃப்ளாஷ் போன்று ஒரு மின்னல் கோடு தெரிவது ஆகியவை நீரிழிவு நோய்களால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு அலட்சியம் இல்லாமல் உடனடியாக கண் பரிசோதனை செய்து அதற்கு உண்டான சிகிச்சை எடுத்துக் கொண்டால் பலவித கண் பிரச்சனைகள் இருந்தும் கண் பார்வை போகாமல் இருப்பதிலிருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
