அய்யோ நெஞ்சே பதறுதே.. ரயில் நிலையத்தில் 3 வயது பிஞ்சு குழந்தையை தவிக்க விட்டு சென்ற கொடூரன்.. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 17, 2025

Spread the love

பரங்கிமலை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை கீழே இறக்கி விட்டு சென்றுள்ளான் ஒரு கொடூரன். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சானடோரியம் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு போலீசார் குழந்தையை மீட்டு பரங்கிமலை அழைத்து வந்துள்ளனர். குழந்தையின் விவரம் ஏதும் தெரியாததால் ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சானடோரியம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் குழந்தையை ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. குழந்தையை எதற்கு இறக்கி விட்டார்கள், கடத்தி வந்தவரா, என்று எழுதும் இதுவரை தெரியவில்லை . இதைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.