சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அரசு வீட்டு வசதியை வழங்கி வருகிறது. அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருக்கும். ஏழை மக்களுக்கு வீடு கட்ட உதவுவதற்காக மத்திய அரசு ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் வீடு கட்டுவதற்கு அரசு தரப்பில் இருந்து மானிய உதவி வழங்கப்படுகின்றது. இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்து ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வீடு வாங்க உதவி வழங்கப்படுகிறது. சொந்த நிலத்தில் வீடு கட்ட அரசாங்கம் 2.5 லட்சம் வழங்கும்.
நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்க உதவியுடன் கட்டுமான நிறுவனங்களால் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் கிடைக்கும். வீட்டு கடன்களுக்கு 2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெறலாம். நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS, LIG, MIG குழுக்களை சேர்ந்த குடும்பங்கள் நிரந்தர வீடு இல்லாமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம். நகர்ப்புற திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் பயன்படுத்தலாம். கடந்த 20 ஆண்டுகளில் ஏதாவது வீட்டு வசதி திட்டத்திலிருந்து உதவி பெற்றிருந்தால் இதில் விண்ணப்பிக்க முடியாது. நகர்ப்புறம் அல்லது கிராமப்புறம் இரண்டில் ஒன்றுக்கு மட்டுமே வீடு கட்ட விண்ணப்பிக்க முடியும்.
விதவைகள், தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எஸ்சி எஸ்டி மற்றும் சிறுபான்மையினர், பிரம்மா ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெரு வியாபாரிகள், பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சேரிகளில் வசிக்கும் அல்லது கட்டுமானத்தில் பணியாற்று மக்கள் இந்த திட்டத்தில் வீட்டு வசதி பெற விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வை இணையதள பக்கத்திற்குச் சென்று நீங்கள் தகுதியான ஆவணங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், வருமானச் சான்றிதழ் மற்றும் நில ஆவணங்கள் அவசியமாகும்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…