ஐயோ நாங்க இப்படி ஆகும் நினைக்கல..! 3-வது மாடியில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… தீவிர சிகிச்சைப் பிரிவில் பரிதாபம்…!!

By Gayathri on ஆவணி 17, 2026

Spread the love

பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில், குடியிருப்பின் மூன்றாம் மாடி அமைப்பில் உள்ள கிரில்லில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளான். பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில், நேற்று காலை இத்துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பல அடி உயரத்திலிருந்து அதிவேகமாகத் தரையில் மோதியதில் சிறுவனுக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுவன் கீழே விழுந்ததைக் கண்ட அந்த வழியாகச் சென்ற இரு பெண்களும், அப்பகுதி மக்களும் உடனடியாக அவனை மீட்டு இருசக்கர வாகனத்திலேயே கோரமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தச் சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இச்சிறுவனின் தந்தை சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார். இச்சம்பவம் தொடர்பாகப் புகார் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனினும், விபத்து நிகழ்ந்ததற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.