ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் அரங்கேறிய இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான மூன்று மாதங்களிலேயே, அஞ்சு (23) என்ற பெண் தனது கணவர் ஆஷிஷைக் கொல்லத் தனது முன்னாள் காதலன் சஞ்சு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். ஜனவரி 30 அன்று இரவு, வழக்கமான நடைப்பயிற்சியின் போது ஆஷிஷை ஒரு ஒதுக்குப்புறமான சாலைக்கு அஞ்சு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சஞ்சுவின் கூட்டாளிகள் ஆஷிஷை சரமாரியாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அது ஒரு வாகன விபத்து போலத் தோற்றமளிக்கச் செய்துள்ளனர்.
இந்தக் கொலையை மறைக்க, திருட்டுச் சம்பவம் போல நாடகமாடிய அஞ்சு, தனது செல்போன் மற்றும் நகைகளைத் தாக்குதல் நடத்தியவர்களிடமே கொடுத்துவிட்டு, சாலையில் மயங்கிக் கிடப்பது போல நடித்துள்ளார். இருப்பினும், பிரேதப் பரிசோதனையில் ஆஷிஷின் கழுத்தில் இருந்த காயங்கள் மற்றும் அஞ்சுவின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அஞ்சுவின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவர் தனது காதலனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சு, அவரது காதலன் சஞ்சு மற்றும் அவர்களது நண்பர்கள் இருவர் என மொத்தம் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…