BREAKING: கனமழை எதிரொலி: சற்றுமுன் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இதனால் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக இராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.