தேனி மாவட்டத்தில், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த அவரது தாய்மாமன் முகேஷ் (27) என்பவருக்கு போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிறுமி பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக அக்குழந்தை முதலில் வேறொருவரிடம் கொடுக்கப்பட்டு, பின்னர் பராமரிக்க முடியாத சூழலால் குழந்தை நலப் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், 2023 நவம்பர் மாதத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முகேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த தேனி மாவட்டக் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ச. எழில், முகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இரண்டாவது எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த சிறுமியின் தாயார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால மறுவாழ்வைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், அபராதத் தொகையைக் கழித்து மீதமுள்ள ரூ.4.90 லட்சத்தைச் சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகச் சேமித்து, அவர் வயது வந்த பிறகு பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…
1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…
திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி…
மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர்,…