தமிழ் சினிமாவில் 80ஸ் ஹீரோக்களில் ஒருவரான தியாகராஜன் சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார். இது போன்றே தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக இருந்த பெட் கேட்டி சிவராமின் என்பவரின் மகளான சாந்தியை மணமுடித்தார்.
மேலும் இவர்களுக்கு திருமணம் ஆனதை கூட தன் குழந்தைகளின் சுதந்திரத்திற்காக வெளி உலகத்திற்கு சொல்லாமல் இருந்துள்ளதாக தற்போது அந்தகன் படத்தின் ப்ரோமோஷன்க்காக கலந்து கொண்ட பிரசாந்த் பிரபல ஊடகங்களிடம் கூறியுள்ளார். மேலும் 17 வயதை அடைந்தவுடன் தன்னை திரையுலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அனைவரும் விரும்பியதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது.
ஆனால், திரையுலகத்தில் கால் பதித்தவுடன் சினிமா வெற்றியை பார்த்து அந்த கனவை கைவிட்டதாகவும் கூறினார். தனது 17 வயதில் இருந்து 52 வயது வரை சினிமா திரையுலகில் எந்த ஒரு கதாநாயகி உடனும் தவறான சர்ச்சையில் சிக்கியதில்லை என்றும் ஒரு நடிகனாக அனைவரிடமும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டதாகவும் கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.
ஆனாலும் திருமண வாழ்க்கை எனக்கு சரியாக அமையவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல் எனக்கு எல்லாமே என் குடும்பம் தான் என்றும் கூறியிருக்கிறார். என் தங்கை பிரீத்தி லண்டனில் எம்.பி.ஏ முடித்துவிட்டு பிரத்யோக நகை டிசைனிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். என் தங்கைக்கு ஒரு அண்ணனாக இருந்தும் அப்பாவாக இருந்தும் அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நான் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் அது பற்றி முதலில் தந்தைக்குப் பின் என் தங்கையிடம் ஆலோசனை கேட்பதாகவும் அதற்கான சரியான முடிவை ப்ரீத்தி கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரசாந்தின் தங்கை ப்ரீத்தி செம ஸ்டைலான மற்றும் மாடலான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார். ஹீரோயின் போல இருக்கும் அந்த போட்டோஸ்கள் தற்போது இணையதளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.