Categories: சினிமா

முதலில் ஒருவர் கடைசியில் இன்னொருவர்… இயக்குனர் பாலா படங்களில் படங்களில் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா?

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

இயக்குனர் பாலா தன்னுடைய படங்களை முடிப்பதற்கு மிக நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வார். இதனால் அவர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் ஹீரோக்கள் கடைசி கட்டத்தில் பின் வாங்கி பின்னர் வேறொருவர் கதாநாயகன் ஆவது வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.

#image_title

பாலா முதலில் இயக்கிய சேது படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் முரளி. பின்னர் அவர் விலகி அவருக்குப் பதில் விக்ரம் வந்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய நந்தா படத்திலும் சூர்யா நடிப்பதற்கு முன்னர் அஜித்தான் நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜித் ஒப்பந்தமாகி அதற்காக தாடி, நீண்ட தலைமுடி வளர்த்து வந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் அவர் விலக ஆர்யா நடித்தார்.

அவர் இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் சூர்யா, கார்த்தியை முதலில் நடிக்க வைக்க நினைத்தார். பின்னர் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் பேசப்பட்டனர். ஆனால் கடைசியில் ஆர்யாவும் விஷாலும் நடித்தனர். இதே போல அவர் இயக்கத்தில் இப்போது உருவாகி வரும் வணங்கான் படத்தில் கூட முதலில் சூர்யா நடித்து, பின்னர் அவர் விலகி அருண் விஜய் நடித்து வருகிறார்.

vinoth

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

7 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago