மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் வயது 12. இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். பழைய ஆயக்குடி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு வரை படித்துவிட்டு இந்த ஆண்டுதான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த மாணவன் பள்ளிச்சீருடை அணிந்து வராமல் கலர் பேண்ட் போட்டு வந்துள்ளால் . தலைமை ஆசிரியர் ஏன் சீருடை அணிந்து வரவில்லை என்று சத்தம் போட்டு உள்ளார். பின்பு அச்சிறுவனின் கையைப் பிடித்து திருகி அடித்ததாகவும். அதனால் கை தசை கிழிந்து கட்டு போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் மீது மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாணவன் மற்றும் மாணவனின் தந்தையும் புகார் அளித்துள்ளனர். அச்சம்பவத்தை குறித்து தந்தை கூறியது; எனது மகன் பள்ளி சீருடை வாங்கும் போதே பேண்ட் அளவு சரியில்லாமல் கொடுத்திருந்தனர். அதை கேட்டபோது பேண்ட் வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். அதனால் எனது நண்பர் மூலமாக கிடைத்த சீருடை பேண்டை அணிந்து கொண்டிருந்தான். சம்பவத்தன்று என் மகன் கலர் பேண்ட் அணிந்துப் பள்ளிக்கு சென்றிருந்தான். அதற்காக தலைமை ஆசிரியர் திட்டிக் கையை திருகி அடித்ததனால் என் மகனுக்கு காயம் ஏற்பட்டு கட்டுப் போட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…