இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் கைப்பேசியை மாற்றும்போது தங்கள் தொலைபேசி எண்ணையும் மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், சிலர் பல ஆண்டுகளாக ஒரே எண்ணைப் பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்களின் குணம் பற்றி ஏதேனும் வெளிப்படுத்துகிறதா என்ற சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பும் ஒரு குறுகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று 31 வினாடி வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே எண்ணைப் பயன்படுத்தும் ஒருவர், “பொறுப்புள்ள மற்றும் நம்பகமான மனிதர்” என்பதை இது காட்டுகிறது. மேலும், அவர்கள் மீது எந்தவித நீதிமன்ற அல்லது காவல் நிலைய வழக்குகளும் இருக்காது, அவர்கள் துணையிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள்.
அவர்களுக்குப் பெரிய கடன் அல்லது பாக்கிகள் எதுவும் இருக்காது.மேலும் சமூகத்தில் சரியான இணக்கத்தோடு இருக்கக்கூடியவர் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூற்றை பல பயனர்கள் ஏற்றுக்கொண்டு, தாங்கள் 10 முதல் 21 ஆண்டுகள் வரை ஒரே எண்ணைப் பயன்படுத்துவதாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…