தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் பெறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 6 வயதிலிருந்தும் முறையாக இசையை பயிற்சியை தொடங்கிய இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 600 திரைப்படங்களில் இசை கலைஞராக பணியாற்றி இருக்கின்றார். ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர், மணி ஷர்மா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என பல இசையமைப்பாளர் உடன் பணியாற்றி இருக்கின்றார்.
2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சாமுராய், லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார்.

தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து பிரபல தயாரிப்பாளரான செவன்த் சேனல் நாராயணன் சில தகவல்களை பகிர்ந்திருக்கின்றார். இவர் தமிழில் குறிப்பிட்ட அளவு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். புதிய தென்றல் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தார்.
இவர் ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து கூறியதாவது ஒருமுறை தனக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ஃப்ரீயாக மியூசிக் போட்டு தருவதாக கூறினார். இதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் அவர் பணம் வாங்காமல் வேலை செய்ய மாட்டார். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் மியூசிக் போடும்போது ரீ ரெக்கார்டிங் சமயத்தில் தன்னை அழைத்து நாராயணன் சார், நீங்கள் பணம் கொடுத்தால்தான் நான் மியூசிக் போடுவேன் இல்லை என்றால் போட மாட்டேன் என்று கூறிவிட்டார்.

யாராவது சினிமாவில் இப்படி கூறுவார்களா? எதையும் நேராக பேசக்கூடிய மனிதர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த விஷயம் அவர் நேரடியாக பேசக்கூடிய ஒரே மனிதர் ஹாரிஸ் ஜெயராஜ் தான். அதன் பிறகு தனது மகன் திருமணத்திற்கு அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு கிராமத்திற்கு வந்து விட்டார். காரைக்கால் அருகில் 20 கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். அந்த இடத்திற்கு வந்து தனது மகன் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் என்று பெருமையாக பேசி இருந்தார் மாணிக்கம் நாராயணன்.
