பால் வண்ண மேனியை பஞ்சு போன்ற உடையால் மூடி ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா மோத்வானி….வைரலாகும் புகைப்படங்கள்….லேட்டஸ்ட் கிளிக்ஸ்

By Begam

Published on:

தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஹன்சிகா மோத்வானி.  தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் அறிமுகமாக தனது கொழுக் மொழுக் அழகால் ரசிகர்களை கட்டி போட்டார். அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களாக விஜய், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.

   

குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர். 2007 ஆம் ஆண்டு அறிமுக வெளியான ‘தேசமுத்துரு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு பிஸியாக நடித்துக்  கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து படவாய்ப்புகள் குறையவே இளம் நடிகர்களுடன்  ஜோடி போடுவதற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். சென்ற வருடம் இவருக்கு நல்ல வருடமாக அமையவில்லை.இவருடைய படங்கள் நல்ல வரவேற்பு பெறவில்லை. ஆனால் இந்த வருடம் அவர் 9 க்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். அதுபோல தன் பால் வண்ணமேனியை  பஞ்சு போன்ற உடையால்  மூடிய புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.