நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் பிரபல சீரியல் நடிகரா ?… 10 வருட காத்திருப்பு  வீணானது ஏன்?.. மனம் திறந்த நடிகை …..

By Begam

Published on:

தமிழ் திரை உலகில் வித்தியாசமான முறையில் படங்களை தயாரிப்பதில்  கைத்தேர்ந்தவர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் எழுத்தாளர் என பல தன்மைகளை கொண்டவர்.

இவருடைய இயக்கத்தில் தற்போது வெளியான’ இரவின் நிழல்’ திரைப்படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் ஒரே ஷாட்டாக இடைவேளை இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது.2009ல் இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதை பெற்று சாதனை படைத்தது.

   

1980களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை சீதா. ஆண்பாவம், குரு சிஷ்யன் போன்ற பல படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் இயக்கிய படங்களில் நடித்த இவர் நடிகர் பார்த்திபனுடன் காதல் வயப்பட்டார். பின்னர் வீட்டில் கூறவே வீட்டில் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால், நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து சீதா பிரபல சீரியல் நடிகர் சுதீஷ் என்பவரை 2010 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அவர் அச்சமயம் அளித்த பேட்டி ஒன்றில் ‘ஆண் துணை இல்லாமல் பெண் தன் இறுதி காலத்தில் வாழ முடியாது’ என்று கூறி இருந்தார்’. பின்னர் சதீஷையும் கடந்த 2016 ஆண்டு விவாகரத்து செய்தார். திரை துறையில் கொடி கட்டி பறந்தாலும்,அவருடைய சொந்த வாழ்க்கை அவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.