#image_title
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் ஜிவி பிரகாஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பல துறைகளில் சாதித்து வருகின்றார். இவர் இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன். முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
அதன்படி பொல்லாதவன், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, ராஜா ராணி, ஆடுகளம், சூரரைப் போற்று உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள தங்கலான் திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார். மறுபக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் ஜிவி பிரகாஷ் கலக்கி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் நீக் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவிற்கு ரிப்ளை செய்யும் வகையில் ரசிகர் ஒருவர், அண்ணா நாலு நாளா சரியா சாப்பிடாம நானும் எனது மனைவியும் இருக்கின்றோம். உங்ககிட்ட 500 ரூபாய் இருந்தா ஜி பே பண்ணுங்க ப்ளீஸ் என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ஜீவி பிரகாஷ் உடனே ரிப்ளை செய்தார்.
அதில், உங்களின் ஜி பி நம்பரை அனுப்புங்க என்று பதிவிட்டார். அதற்கு அந்த ரசிகரும் அவருடைய நம்பரை அனுப்பிய நிலையில் ப்ளீஸ் அண்ணா என்று மீண்டும் உதவி கேட்டார். இதனைப் பார்த்த ஜிவி பிரகாஷ் அந்த ரசிகருக்கு 2500 ரூபாய் அனுப்பி நல்லா சாப்பிடுங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…