சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சி.எஸ்.கே கிரிக்கெட் லிமிடெட் இணைந்து ஒரு பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளன. இதன்படி, போட்டிக்கான மின்னணு அல்லது அச்சு வடிவ நுழைவுச் சீட்டு (Match Ticket) வைத்திருக்கும் ரசிகர்கள், மெட்ரோ பயணத்திற்காகத் தனியாக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. நுழைவுச் சீட்டில் உள்ள க்யூ.ஆர் (QR) குறியீட்டை மெட்ரோ நிலைய நுழைவாயில்களில் ஸ்கேன் செய்து, எந்தக் கட்டணமுமின்றி மைதானத்திற்குச் செல்லவும், அங்கிருந்து வீடு திரும்பவும் மெட்ரோவில் பயணிக்கலாம்.
போட்டி முடிந்து ரசிகர்கள் தாமதமாக வீடு திரும்புவதைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் சென்னை விமான நிலையம் நோக்கிய கடைசி ரயில்கள் நள்ளிரவு 1 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலின்றி நிம்மதியாகப் பயணம் செய்ய முடியும். அதேசமயம், பச்சை வழித்தடத்தில் (Green Line) செல்ல வேண்டிய பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே வழித்தட மாற்றம் (Interchange) செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரயில் சேவையைச் சீராகப் பயன்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளையும் மெட்ரோ நிர்வாகம் விதித்துள்ளது. ரசிகர்கள் கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்கவும், ரயிலைத் தவறவிடாமல் இருக்கவும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே மெட்ரோ நிலையத்திற்குள் நுழைய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு இலவச பயண வசதியானது அரசினர் தோட்டம் நிலையத்திற்குச் சென்று வர மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோவின் இந்த அதிரடித் திட்டம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…