சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு மக்கள் மனதில் பிரபலமானவர் ஜி பி முத்து. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றவர். சில படங்களிலும் நடித்திருக்கிறார் ஜிபி முத்து. தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உள்ளூரில் உள்ள கோவிலில் ஒலிக்க விடப்படும் பாடல்களின் சத்தத்தால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.
அதில் ஜிபி முத்து கூறியிருப்பதாவது, என் வீட்டு பக்கம் இருக்கிற ஸ்கூலுக்கு பக்கத்துல கோவில் இருக்கு. அந்த கோவிலில் காலை 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சா சாயங்காலம் வரைக்கும் போடுறாங்க. இதனால் ஸ்கூல் பசங்களோட நிலைமை என்ன ஆகிறது? இப்ப எக்ஸாம் வேற நடக்குது. இந்த மாதிரி நேரத்துல பாட்டு போடுவதனால் பசங்கதான் கஷ்டப்படுவாங்க. சவுண்ட்டை குறைச்சு வெச்சா தான் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஜிபி முத்துவின் இந்த சமூக அக்கறையான கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அவரது இந்த சமூக விழிப்புணர்வு அக்கறையை பலரும் பாராட்டி வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…