சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் ரீல்ஸ் வெளியிட்டு மக்கள் மனதில் பிரபலமானவர் ஜி பி முத்து. விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றவர். சில படங்களிலும் நடித்திருக்கிறார் ஜிபி முத்து. தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உள்ளூரில் உள்ள கோவிலில் ஒலிக்க விடப்படும் பாடல்களின் சத்தத்தால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.
அதில் ஜிபி முத்து கூறியிருப்பதாவது, என் வீட்டு பக்கம் இருக்கிற ஸ்கூலுக்கு பக்கத்துல கோவில் இருக்கு. அந்த கோவிலில் காலை 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சா சாயங்காலம் வரைக்கும் போடுறாங்க. இதனால் ஸ்கூல் பசங்களோட நிலைமை என்ன ஆகிறது? இப்ப எக்ஸாம் வேற நடக்குது. இந்த மாதிரி நேரத்துல பாட்டு போடுவதனால் பசங்கதான் கஷ்டப்படுவாங்க. சவுண்ட்டை குறைச்சு வெச்சா தான் என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஜிபி முத்துவின் இந்த சமூக அக்கறையான கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அவரது இந்த சமூக விழிப்புணர்வு அக்கறையை பலரும் பாராட்டி வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
