நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள். சங்கரகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய சுப்பிரமணி ஆறு மாதங்களுக்கு முன்புதான் இடமாறுதல் பெற்று திருச்சி வந்துள்ளார்.
எந்த நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்று அதிகாலை அன்று ரயிலின் முன்பு விழுந்து உயிரை மாய்த்து கொண்டார்கள். இவர்களுடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரித்ததில் மகனின் காதலுக்கு சுப்ரமணியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் காதலை கைவிட மறுத்த மகன் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தார். இதனால் விரத்தியடைந்த கணவன் மனைவி இருவரும் ரயில் முன்பு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
