சுயதொழில் தொடங்க ஆசையா..? ₹25 லட்சம் வரை அரசு நிதியுதவி… அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு… முழு விவரம் உள்ளே…!!

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த மிகக் குறைந்த வட்டியில் தொழில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள தனிநபர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

இக்கழகத்தின் மூலம் சிறுதொழில் வியாபாரம், கைவினைத்தொழில்கள், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், போக்குவரத்து வாகனங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு சுயதொழில் தேவைகளுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. தனிநபர் கடன்கள் மட்டுமின்றி, சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் தங்களின் கூட்டுமுயற்சியால் தொழில் தொடங்கவும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் பண்ணை அமைத்து மேம்படவும் இந்த நிதியுதவி பெரிதும் துணையாக நிற்கிறது.

   

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவராகவும், குறிப்பிட்ட குடும்ப ஆண்டு வருமான வரம்பிற்குள் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அல்லது கூட்டுறவு வங்கிகள் மூலம் இதற்கான விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இக்கடனைப் பெற்று பயன் பெறலாம்.