மதிமுக-வில் 33 ஆண்டுகளாகப் பயணித்து வந்த தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை சுப்பிரமணி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். வரும் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில், குடும்ப மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த இவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதை சுப்பிரமணியின் இந்த திடீர் ராஜினாமா முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள மதிமுக தலைமை, அவரை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த ஒரு முக்கிய நிர்வாகி பொதுக்குழுவிற்கு முன்பாக விலகியிருப்பது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
