Connect with us

CINEMA

சூட்டிங் ஊட்டிலயா.? சென்னையை விட்டு வர மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நயன்தாரா.! பிடிவாதத்திற்கு காரணம் இதானா.?

தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே அது “நயன்தாரா” மட்டும்தான். இவர் நடித்து வெளிவந்த பல படங்கள் வெற்றி படங்களாக மாறி இருக்கிறது. ஆனால் சில காலமாக இவர் படங்களில் அவ்வளவாக ஈடுபடாமல் தனது கணவர் விக்னேஷ்வுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். சில காலங்களுக்கு முன்னால் தான் தனது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

நேற்று நயன்தாரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “I AM lost” என்று ஸ்டோரி ஒன்று போட்டிருந்தார். அது மிகவும் பேசும் பொருளாக வைரலாகி வந்தது. ஒருவேளை இவருக்கும் இவர் கணவர் விக்னேஷுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்குமோ? என்று பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால் அது பொய் என்று விக்னேஷ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவும் இவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

   

தற்போது நயன்தாரா அவர்கள் “மண்ணாங்கட்டி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் “DUDE விக்கி” இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு நடித்து வருகிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் லட்சுமணன் கம்பெனியான பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஊட்டியில் ஒரு காடை கொளுத்துவது போல் காட்சி உள்ளதாம், அதனால் இப்படக்குழு ஊட்டியில் உண்மையாகவே ஒரு காடை கொளுத்தலாம் என்று முடிவு செய்த பொழுது, நயன்தாரா அது வேண்டாம், மிகவும் தவறான விஷயம்,

நாம் இயற்கைக்கு புறம்பாக எந்த விஷயம் செய்ய வேண்டாம், அந்த விஷயத்தை சென்னைக்கு வெளிப்புறத்தில் ஏதாவது ஒரு இடத்தில் செட் போட்டு செய்து கொள்ளலாம், நயன்தாரா அவர்கள் சொல்லி உள்ளார் என்று தகவல் கசிந்து இருக்கிறது. இதை தெரிந்த ரசிகர்கள் எல்லாரும் இவ்வளவு பெரிய மனச நயன்தாராவுக்கு என்று, பலரும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top