இந்தியாவில் 25 வயது இளைஞர் ஒருவர், உடலுறவின் போது பாதுகாப்பு உறை (Condom) இல்லாததால் அதற்குப் பதிலாகப் பலத்த ஒட்டும் தன்மையுடைய பசையைப் (Strong Glue) பயன்படுத்தியதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனது முன்னாள் நிச்சயதார்த்தப் பெண்ணுடன் விடுதி ஒன்றிற்குச் சென்றிருந்த போது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, அடுத்த நாள் காலை அந்த இளைஞர் விடுதி அறையில் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
