“காதலனுடன் வீடியோ கால்…” செல்போன் கடையில் வைத்து காதலி செய்த காரியம்…. பதற வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் எருமனூர் கிராமத்தை ச் சேர்ந்த தர்ஷினி(18) அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விருதாச்சலம் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே இருக்கும் செல்போன் கடையில் பகுதி நேர ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வேலையில் இருந்தபோது தர்ஷினி தனது காதலனை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த தர்ஷினி கடையின் பின்புறமாக சென்று அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.