உத்திரபிரதேச மாநிலம் ராம்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்பால். இவரது மனைவி காவ்யா(40).(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஓட்டுனராக வேலை பார்க்கும் நூர்பால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் காவ்யா தனக்கு மருமகன் உறவு முறை கொண்ட பிரம்மா என்ற வாலிபருடன் நெருக்கமாக பழகியுள்ளார். காவ்யாவை பிரம்மாவை விட ஐந்து வயது சிறியவர்.
நூர்பால் வீட்டில் இல்லாத நேரம் பிரம்மா அடிக்கடி வீட்டிற்கு வந்து காவ்யாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். உறவினர் என்பதால் இந்த விஷயத்தை அறியாமல் நூர்பால் பிரம்மாவை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். ஒரு கட்டத்தில் இது குறித்து அறிந்த நூர்பால் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக பிரம்மா தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக காவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவியா நான் இந்த வழக்கை தொடர விரும்பவில்லை. எங்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் காவல் நிலையத்திலேயே இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு நபரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது.
