மாதவன் இல்லை இந்த நடிகர் தான் ; மின்னலே படத்தின் முதல் சாய்ஸ் இவர் தான் ; உண்மையை சொன்ன கவுதம் மேனன்

By Deepika on பங்குனி 22, 2024

Spread the love

 

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த இயக்குனர் என்றால் கவுதம் மேனன் தான். மின்னலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் மின்னலாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கொண்டார். தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இப்போது அவரின் துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

   

Still from Minnale

   

கௌதமை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், காரணம் அவர் உருவாக்கிய பெண் கதாபாத்திரங்கள் தான். அறிவாக, அழகாக, துணிச்சலான பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியவர் கவுதம் தான். மின்னலே படத்தின் மூலமே அனைவரின் மனதிலும் இவர் இடம்பிடித்தார். தற்போது மின்னலே படம் குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, மின்னலே படத்தின் உயிரே மாதவன் கதாபாத்திரம் தான். ஆனால் அந்த ராஜேஷ் கதாபாத்திரத்துக்கு முதல் சாய்ஸ் மாதவன் இல்லையாம், சூர்யா தான் முத்த சாய்ஸ் என கூறியுள்ளார் கவுதம் மேனன்.

 

Minnale

இந்த கதையை சூர்யாவிற்காக பண்ணலாம் என முடிவு செய்து, சூர்யாவின் தந்தையும் மூத்த நடிகருமான சிவகுமாரிடம் மின்னலே படத்தின் கதையை கூறியுள்ளார் கவுதம் மேனன். ஆனால், அந்த கதையை சிவகுமார் நிராகரித்துவிட்டாராம்.

suriya was the first choice for minnale

அதன்பின் தான் மின்னலே கதை மாதவனிடம் கூறினாராம் கவுதம். முதல் படத்தில் சூர்யாவுடன் இணைய முடியவில்லை என்றாலும், காக்க காக்க,வாரணம் ஆயிரம் என தொடர்ந்து அவருடன் பணியாற்றினார் கவுதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துருவ நட்சத்திரம் கதையும் சூர்யாவுக்கு சொல்லப்பட்டு அதன்பின் தான் விக்ரம் அதில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.