Categories: சினிமா

கமல் எவ்வளவோ சொல்லியும் தசாவதாரம் பட வாய்ப்பை நிராகரித்த கௌதம் மேனன்.. இந்த சின்ன மேட்டர்தான் காரணமா?

Spread the love

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார்.

அப்படிதான் காக்க காக்க திரைப்படத்தை இயக்கிய கௌதம் மேனனை தன்னுடைய படம் ஒன்றை இயக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அவரை சந்தித்த போது தசாவதாரம் கதையை சொல்லி அதை இயக்க சொல்லி கேட்டுள்ளார். முதலில் அதற்கு ஒத்துக்கொண்ட கௌதம் மேனன் சில நாட்கள் சென்றதும் அதில் தயக்கம் காட்டியுள்ளார்.

ஏனென்றால் கமலின் அவ்வளவு பெரிய பார்வையை தன்னால் திரையில் கொண்டுவர முடியுமா என தயங்கியுள்ளார். மேலும் அப்போது அவருக்கு ஒரே நடிகரே இரட்டை வேடத்தில் நடிப்பது பிடிக்காத ஒன்றாக இருந்துள்ளது. மேலும் அவருக்கு டபுள் ஆக்ட் காட்சிகளை படமாக்கவும் அப்போது தெரியாதாம். அதனால் கமலிடம் அதை எடுத்து சொல்லிவிட்டு அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

அதன் பின்னர்தான் தசாவதாரம் படத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என முடிவு செய்த கமல், அவரிடம் கதை எதாவது இருக்கிறதா எனக் கேட்டுள்ளார். அப்போது கௌதம் சொன்ன கதைதான் வேட்டையாடு விளையாடு. தசாவதாரம் படத்துக்கு முன்பாக அந்த படத்தில் நடித்துவிடலாம் என முடிவு செய்த கமல் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கமலின் திரை வாழ்க்கையில் மிகவும் ஸ்டைலிஷான ஒரு படமாக இன்றளவும் வேட்டையாடு விளையாடு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

2 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago