#image_title
கருடன் திரைப்படத்தின் வெற்றியால் நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது மிகப் பெரிய ஹீரோவாக வளர்ந்து நிற்கின்றார் நடிகர் சூரி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தை பெற்றார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசதி வந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கி அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் வரை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளம் வந்த சூரி விடுதலை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்த சூரிக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் ஹீரோவாக நடிப்பதற்கு அமைந்து வருகின்றது. அப்படி துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் சூரிக்கு சம்பளமாக 2.5 கோடி தான் அட்வான்ஸ் தொகை கொடுத்திருந்தார் தயாரிப்பாளர். மேலும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூரியின் மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் ஒரு காஸ்ட்லியான கிப்ட் பரிசாக வழங்கியிருக்கின்றார்.
பிஎம்டபிள்யூ காரில் எக்ஸ் 7 மாடலில் அமைந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கின்றார், இதன் விலை ஒரு கோடியே 35 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இனி சூரி ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் அதைத்தொடர்ந்து கொட்டுக்காளி என இரண்டு திரைப்படங்களிலும் இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…