பருத்திவீரன் பட விவகாரத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா, பொன்வண்ணன், கரு பழனியப்பன் என பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இருப்பினும் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் தற்போது வரை வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் முக்கியமான காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பு இதுகுறித்து அவர் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதன்படி பேட்டி ஒன்றில் பேசிய அவர், “இந்த படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. ஆனால் கார்த்தி தாடியுடன் இருந்ததால் அவரை அமீர் சார் நடிக்க வைத்தார். கார்த்திக்கு நடிக்கவே தெரியாது. நான் ஒரு டேக்கில் முடிப்பேன். ஆனால் அவனுக்கு 15 டேக் ஆகும். அப்போ அந்த ஃபிலிம் கணக்கெல்லாம் யார் பொறுப்பு? பருத்திவீரன் எப்படிப்பட்ட படம் தெரியுமா? பருத்திவீரன் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு காரணம் முழுக்க அமீர் சாரின் பணம் தான்.
ஆனால் அவரை ஏமாற்றி விட்டார்கள். அவர் வீட்டு பணத்தை ஏமாற்றி சூர்யா குடும்பமும் சிவகுமார் குடும்பமும் கார்த்தி குடும்பமும் ஆட்டைய போட்டு வருகிறார்கள். அவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். சூர்யா குடும்பத்தை நடிகர் கஞ்சா கருப்பு ஒருமையில் பேசியுள்ளது அவர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…