பருத்திவீரன் பட விவகாரத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா, பொன்வண்ணன், கரு பழனியப்பன் என பலரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இருப்பினும் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் தற்போது வரை வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார்கள். இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் முக்கியமான காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பு இதுகுறித்து அவர் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதன்படி பேட்டி ஒன்றில் பேசிய அவர், “இந்த படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தது. ஆனால் கார்த்தி தாடியுடன் இருந்ததால் அவரை அமீர் சார் நடிக்க வைத்தார். கார்த்திக்கு நடிக்கவே தெரியாது. நான் ஒரு டேக்கில் முடிப்பேன். ஆனால் அவனுக்கு 15 டேக் ஆகும். அப்போ அந்த ஃபிலிம் கணக்கெல்லாம் யார் பொறுப்பு? பருத்திவீரன் எப்படிப்பட்ட படம் தெரியுமா? பருத்திவீரன் படம் இவ்வளவு சிறப்பாக வந்ததற்கு காரணம் முழுக்க அமீர் சாரின் பணம் தான்.
ஆனால் அவரை ஏமாற்றி விட்டார்கள். அவர் வீட்டு பணத்தை ஏமாற்றி சூர்யா குடும்பமும் சிவகுமார் குடும்பமும் கார்த்தி குடும்பமும் ஆட்டைய போட்டு வருகிறார்கள். அவர்கள் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். சூர்யா குடும்பத்தை நடிகர் கஞ்சா கருப்பு ஒருமையில் பேசியுள்ளது அவர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…