சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (50), கடந்த முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது மகன் கார்த்திக்கைத் தாக்க வந்தது. சரித்திரப் பதிவேடு ரவுடியான கார்த்திக், வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டதால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் வெளியே இருந்த அவரது தந்தை சீனிவாசனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.
கைகால்களில் பலத்த வெட்டுக் காயமடைந்த சீனிவாசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில், சீனிவாசனின் மகன் கார்த்திக்குடன் நட்பு பாராட்டி வந்த பிரசாந்த் (21) என்பவர்தான் இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் என்று தெரியவந்தது. பிரசாந்த் சிறையில் இருந்தபோது, அவரது திருநங்கை மனைவி கீதாவிடம் கார்த்திக் தவறாக நடக்க முயன்றதே இவர்களுக்குள் பகையாக மாறியுள்ளது.
குண்டர் சட்டத்தில் சிறை சென்ற பிரசாந்த், ஜாமீனில் வெளியே வந்து, கார்த்திக்கைப் பழிவாங்க முயன்றபோதுதான் இந்தக் கூலிப்படையின் தாக்குதலில் தந்தை சிக்கினார். இதையடுத்து, பிரசாந்த், புவன் (19), திருநங்கை கீதா (26) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பிரசாந்த் மற்றும் புவன் தப்பியோட முயன்றபோது கை உடைந்ததால், அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…