மகாராஷ்டிர மாநிலம் பூனேவின் ஏரவாடா பகுதியில் உள்ள பரபரப்பான கோல்ஃப் கிளப் சாலையின் நேதாஜி சவுக் பகுதியில், செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் ஒரு இளைஞர் மீது ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அந்த இளைஞரைச் சூழ்ந்துகொண்ட கும்பல் கத்திகள் மற்றும் கம்பிகளால் நடுரோட்டில் வைத்துப் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், குற்றவாளிகளில் ஒருவரின் காதலியைப் பார்த்ததாகவும், அவர் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்குப் பின் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏரவாடா காவல்துறையினர், காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள பானுஜோத் மருத்துவமனையில் 41 வயதான எலும்பியல் மருத்துவர் யோகேந்திர ஜெய்ஸ்வால் என்பவர் பணியாற்றி வருகிறார்.…
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி கர்கா டிங்கிள் கோங்கோ, தன்னை 'சீனக் குழந்தை' என்று அழைத்ததற்கு எதிராகப் பேசி இணையத்தில்…
ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், வாடகை சைக்கிளில் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது, தான்…
நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…
ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…
உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…