தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக 100 சதவீதம் வரை கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வரம்பிற்கு மேல் கடன் தொகைப் பெற்றவர்களுக்குத் தலா ரூ.35,000 வரை தள்ளுபடிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அதிரடி நிவாரணத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 14 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பலனடைய உள்ளனர். இதற்கான தள்ளுபடித் தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…