BREAKING: கடன் முழுவதும் தள்ளுபடி…! பட்ஜெட்டில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

By Devi Ramu on ஆவணி 5, 2026

Spread the love

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக 100 சதவீதம் வரை கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வரம்பிற்கு மேல் கடன் தொகைப் பெற்றவர்களுக்குத் தலா ரூ.35,000 வரை தள்ளுபடிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நிவாரணத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 14 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பலனடைய உள்ளனர். இதற்கான தள்ளுபடித் தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருவதாகவும் பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.