#image_title
எந்த ஒரு பெற்றோரும் தனது பெண் குழந்தைகளை படிக்க வைத்து அவர்களை திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு சில பெண்கள் மட்டும் துறவறம் மேற்கொள்ள விரும்புவார்கள். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும். இளம் வயதிலேயே துறவறம் என்ற முடிவு எடுப்பது மிகவும் தைரியமான ஒன்றாகும். அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
ஈரோடு மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த நான்கு இளம்பெண்களின் துறவறம் ஏற்கும் விழா நடைபெற்றது. மஹாவீரை பின்பற்றுபவர்கள் தான் ஜைன சமூகத்தினர். வசதியான குடும்பத்தை சேர்ந்த ஆர்த்தி, பாவனா, சாக்ஷி, நிஷா என்ற நான்கு இளம்பெண்கள் ஜெயின் சமூக விதிகளின்படி பெற்றோர் சம்மதத்துடன் துறவறத்தை மேற்கொள்ளப் போவதாக முடிவு எடுத்துள்ளனர்.
சுய விருப்பத்தின் பெயரில் ஜெயின் கோவிலில் உள்ள துறவியிடம் ஆசி பெற்று துறவறம் மேற்கொள்ளப் போவதாக உறுதி அளித்தனர். இந்த மாதம் ராஜஸ்தானில் நடைபெறவிருக்கும் ஜெயின் திருவிழாவில் இந்த நான்கு இளம் பெண்களும் வெள்ளை உடை அணிந்து தங்களை முழுவதுமாக ஜெயின் மத துறவறத்திற்கு அர்ப்பணிக்க உள்ளனர். இந்த நான்கு பெண்கள் எடுத்த துணிகரமான முடிவை அந்த ஊரே வியந்து பார்த்து வருகின்றனர்.
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…