“அம்மா, என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க”…. 4 மாத கர்ப்பிணி கதறிய சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்… பதறியடித்து ஓடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் ஷேக் தாவூத் என்பவரின் 21 வயது மகள் ஆஃப்ரின். இவருக்கும், திருப்பத்தூர் மூலைக்கடை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சித் தலைவரும் திமுக நிர்வாகியுமான சாக்ளாவின் மகன் முகமது அஷ்ரப் (30) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், ஆஃப்ரின் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கணவர் வீட்டில் வசித்து வந்த ஆஃப்ரின், கடந்த ஜூன் 16-ஆம் தேதி இரவு தனது தாய் பாத்திமா பீவிக்கு அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “அம்மா, என்னை இப்பவே வந்து கூட்டிட்டு போயிடுங்க” என்று கதறியுள்ளார். ஆனால், இரவு நேரம் என்பதால் மறுநாள் காலையில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி தாய் ஆறுதல் படுத்தியுள்ளார்.

மறுநாள் (ஜூன் 17) காலையில் ஆஃப்ரினின் தாய் மகளைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, ஆஃப்ரின் தற்கொலை செய்து உயிரிழந்துவிட்டதாகத் தாயாருக்கு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்ந்தது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடனடியாக திருப்பத்தூர் நகர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஆஃப்ரினின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். திருமணமாகி சில மாதங்களிலேயே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததால், சட்டப்படி கோட்டாட்சியர் (RDO) விசாரணையும் இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் மாமனார் சாக்ளா ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாகியாக இருந்ததால், சிவகங்கை அல்லது திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்தால் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்காது என்று ஆஃப்ரினின் பெற்றோர் அச்சம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆஃப்ரினின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஜூன் 19 அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மரணத்திற்குப் பின்னணியில் இருக்கும் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை மகளின் உடலை வாங்க மாட்டோம் எனப் பெற்றோர் மறுத்துவிட்டதால், உடல் மருத்துவமனை பிணவறையிலேயே வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கணவர் முகமது அஷ்ரப் எப்போதும் மொபைல் போனைப் பார்த்துக் கொண்டே இருந்ததால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த சண்டைகளின் போது, அஷ்ரப் தனது மனைவியை மிகக் கொடூரமாகப் பேசி தற்கொலைக்குத் தூண்டும் வகையில் நடந்து கொண்டதும் அம்பலமானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், 4 மாத கர்ப்பிணியான ஆஃப்ரினை தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக அவரது கணவர் முகமது அஷ்ரப்பை திருப்பத்தூர் நகர் போலீசார், சம்பவம் நடந்து 8 நாட்களுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

7 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

18 minutes ago

BREAKING: ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா…. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… நள்ளிரவில் உளவுத்துறை கொடுத்த அந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…

24 minutes ago

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிரோ கார் கும்பல்… மதுரையில் நள்ளிரவு பயங்கரம்… திமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் பின்னணி…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…

27 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்”…. ஒரே நாளில் 15,000 பேர்…. விஜய்யின் கூடாரத்திற்கு மாறும் தமிழக அரசியல்…. அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கியப் புள்ளிகள் விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

36 minutes ago