2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் ஈபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். அதற்காக தேசிய கட்சியான பாஜக உடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக கூட்டணி அமைத்து அதனுடன் சேர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு கட்சி சிதறுண்டு கிடைக்கின்றது.
இபிஎஸ் அதிமுகவின் பொறுப்பை ஏற்ற உடன் கட்சியிலிருந்து முக்கிய முகங்கள் பலரையும் நீக்கினார். முதலில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை நீக்கிய இபிஎஸ் இறுதியில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து தூக்கி வீசி விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைய உள்ளார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சீமான் மரக்காயர், சீனி காதர் மொய்தீன், பக்கர், ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
